புகார்பெட்டி எதிரொலி;தற்காலிக வேகத்தடைகள் அகற்றப்பட்டது

Update: 2022-10-30 14:29 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கோமல் முதல் தேரழந்தூர் வரை உள்ள சாலையில் சிறிய பாலங்கள் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டும் பணி நடந்த போது அந்த பகுதியில் ஆங்காங்கே தற்காலிக வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் பணிகள் முடிந்தும் வேகத்தடைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதுகுறித்து "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானதை தொடர்ந்து தற்காலிக வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்