குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2022-10-30 14:07 GMT

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு செல்லும் தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறு கீழே விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த சாலையை புதிய தார்சலையாக அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்