நடுவட்டம் அரசு டாஸ்மாக் கடை அருகே விதிமுறையை மீறி அதிகாலை நேரத்தில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் கூலி தொழிலாளர்கள் பலர் வேலைக்கு செல்லாமல் போதை மயக்கத்தில் முடங்கி விடுகின்றனர். இதன் காரணமாக குடும்ப பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.