விபத்தை ஏற்படுத்தும் கருவேலமரங்கள்

Update: 2022-07-16 13:11 GMT
நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் வாட்டாக்குடி பகுதியில் உள்ள சாலையோரத்தில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றின் கிளைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக வாட்டாகுடி பகுதி உம்பளச்சேரி - திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள வளைவுகளில் மறுபுற சாலையை மறைத்தபடி கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பொதுமக்கள், வாகனஓட்டிகள் நலன் கருதி கருவேலமரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்