சாலை விரிவாக்க பணி வேகம் எடுக்குமா?

Update: 2022-07-16 11:41 GMT
மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூர் முதல் சட்டநாதபுரம் வரை உள்ள சீர்காழி புறவழிச்சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு சீரமைக்கப்படாமல் உள்ளது. அதுமட்டுமின்றி சாலை விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களால் விபத்துகள் அதிகளவில் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீர்காழி புறவழிச்சாலை விரிவாக்க பணி வேகமாக நடைபெற நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்