நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருந்து உப்பட்டி செல்லும் சாலையில் மழைக்காலத்தில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சாலையோரங்களில் மண் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையோரத்தில் கிடக்கும் மண் குவியலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.