விபத்தில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள்

Update: 2022-10-23 12:35 GMT
அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலை வழியாக அரியலூரில் இயங்கி வரும் சிமெண்டு ஆலைகளுக்கு தினமும் எண்ணற்ற சுண்ணாம்புக்கல் லாரிகள், சிமெண்டு லாரிகள், கல்லூரி, பள்ளி வேன்கள், பஸ்கள் சென்று வருகிறது. இந்நிலையில் மேற்படி சாலையில் பெரும்பாலான இடங்களில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த பள்ளங்களை கடந்த ஆண்டு சீரமைத்தனர். அதாவது பழைய சாலையின் அளவிற்கு பள்ளத்தை சரி செய்யாமல் சற்று உயரத்தை அதிகப்படுத்தி சீரமைத்தனர். இதனால் எதிரில் அசூர வேகத்தில் வரும் கனரக வாகனங்களுக்கு வழி விடும்போது பஞ்சர் ஒட்டப்பட்ட தார் சாலையின் உயரத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர் . இதனால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் சூழல் வி.கைகாட்டி வரை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்