குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-23 11:45 GMT
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே செல்லும் வளைவு அருகே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதில் இரு சக்கர வாகனங்களும், பஸ்களும் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் எது பள்ளம், எது சாலை என்று தெரியாமல் அந்த பள்ளத்தில் இறங்கி விபத்துகள் அதிகமாக ஏற்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி பெரம்பலூர் பஸ் நிலையத்திற்கு ஏராளமான மக்கள் வந்து செல்வதால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்