சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-16 10:42 GMT
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையில் இருந்து ஓடக்கரை கிராமத்துக்கு செல்லும் சாலை முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்