மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை ஊராட்சி மேட்டுக்கொற்கை செல்லும் சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்ட இந்த சாலையை தற்போது சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பல மாதங்கள் ஆகியும் சாலை பணி முடியாமல் செம்மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலையின் வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தார்சாலையாக அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.