மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியிலிருந்து கிழாய் வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் விரிவாக்கத்தின் போது கால்வாய்யை அகலப்படுத்தி சாலை அமைக்கப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு பல மாதங்களை கடந்தும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் பாலத்தில் ஜல்லி கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.