விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் வழியாக துலுக்கபட்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக தார்ச்சாலையானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்த மழையால் இந்த சாலையானது சேதமடைந்து மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.