விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரம் வழியாக ராஜபாளையம் செல்லும் சாலையின் ஓரங்களில் அதிக அளவில் பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் சாலையின் இருபுறமும் விலகி செல்லும் வாகனங்கள் பள்ளங்களில் இறக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.