குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-12 13:40 GMT
கரூர் அருகே என்.கெச்.7 பைபாஸ் ரோடு ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அரிக்காரம் பாளையம், பெரியகோதூர், சின்னகோதூர் என பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள சாலைகளில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு 100-க்கும் மேற்ப்பட்ட குழிகள் தோண்ட பட்டதால் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு சாலை குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் அந்த சாலைகளில் செல்லும் இருசக்கர வாகனங்கள், பள்ளி மாணவிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்