ராயக்கோட்டையை அடுத்த முத்தம்பட்டியில் இருந்து பிரிந்து திம்ஜேப்பள்ளி, சொரகுறுக்கை, பாளையம் போகும் தார்சாலை திம்ஜேப்பள்ளியிலிருந்து தர்மபுரி மாவட்ட எல்லைவரை உள்ள தார்சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக மோசமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் நகர பஸ்கள், தினந்தோறும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தார்சாலையை புதுப்பிக்க முன் வருவார்களா?
-மணி, பாளையம், கிருஷ்ணகிரி.ஓசூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட ஆவலப்பள்ளி ஹட்கோ பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் பொதுமக்கள் சாலையில் வாகனங்கள் தடுமாறி செல்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைத்து, கழிவுநீர் கால்வாய் அமைத்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லோகேஷ், ஓசூர்.