வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-09 14:41 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோவில் பின்புறம் பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில் குறுக்குவழிப்பாதை உள்ளது. இந்த வழியாக வரும் வாகனங்கள் சாலைவிதிகளைப் பின்பற்றாமல் அதிவேகமாக சாலையைக் கடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறுக்குவழிப்பாதையை மூடி விபத்துக்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்