பன்றிகளால் ஏற்படும் விபத்து

Update: 2022-10-09 14:34 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்திபெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். பஸ் நிலையத்தின் அருகே மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் பன்றிகள் அதிகளவில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையின் குறுக்கே பன்றிகள் ஓடுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி