தார்ச்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-10-09 14:33 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அக்ரஹாரம், மேலத்தெரு ஆகிய இடங்களுக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. மழை காலங்களில் இந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதால், போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி