குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-09 13:48 GMT

கோவை செல்வபுரம் பகுதியில் செட்டி வீதி-பேரூர் சாலையில் குளக்கரை அருகில் இருந்து சிவாலயா வரை குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்தால் அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்