சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிகளில் செல்லும் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். சிறு, சிறு விபத்துகளும் நடந்து வரும் இப்பகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.