புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-10-05 14:39 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்தவர் வாசகர் பாலமுருகன். இவர், குரும்பூர் அருகே கீழநாலுமாவடியில் இருந்து தேரிக்காடு வழியாக பூச்சிக்காடு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அங்கு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்