மதுரை 4-வது வார்டுக்குட்பட்ட எஸ்.ஆலங்குளம் அன்புநகர் மெயின்ரோட்டில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.