ஆபத்தான குழி

Update: 2022-10-02 07:28 GMT

ஊஞ்சலூர் பஸ் நிறுத்தம் அருகில் கொளத்துப்பாளையம் பிரிவு சாலை செல்கிறது. இதன் அருகில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் உள்ளது. இதன் முன்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாயை சரி செய்வதற்காக தார்சாலையை ஒட்டியவாறு 4 இடங்களில் குழி தோண்டினார்கள். ஆனால் பணியை முடித்துவிட்டு அப்படியே மூடாமல் போட்டுவிட்டு சென்று விட்டார்கள். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். உடனே இந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்