தார்சாலை வசதி கிடைக்குமா?

Update: 2022-09-30 14:55 GMT

கரூர் மாவட்டம், ஆச்சிமங்கலம்,காக்காவாடி,பாகநத்தம்,கே.பிச்சம்பட்டி,மூக்கணாங்குறிச்சி,மணவாடி,ஏமூர்,உப்பிடமங்கலம் மேல்பாகம், உப்பிடமங்கலம் கீழ்பாகம், வெள்ளியணை வடபாகம்,வெள்ளியணை தென்பாகம், ஜெகதாபி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள நிலம் சம்பந்தபட்ட ஆவணங்களை பதிவு செய்ய வெள்ளியணையில் பத்திரபதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு கரூர் வெள்ளியணை சாலையில் இருந்து பிரிந்து மண் சாலை செல்கிறது .இந்த மண் சாலையானது குண்டும் குழியுமாகவும், மழைக்காலங்களில் சேறும் சகதியாகவும் உள்ளதால் பத்திர பதிவு அலுவலகத்திற்கு வாகனங்களில் வருவோர் மிகவும் சிரமப்படுகின்றனர் . எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த மண்சாலையை தார்சாலையாக மாற்றி தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்