வாய்க்காலுக்குள் உடலை சுமந்து செல்லும் பொதுமக்கள்

Update: 2022-09-29 15:56 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பொன்னாப்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள இடுகாட்டுக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை பொதுமக்கள் வாய்க்காலுக்குள் இறங்கி எடுத்து செல்கின்றனர். குறிப்பாக வாய்க்காலில் தண்ணீர் வரும் காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி அல்லது பாலவசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்