அரியலூர் புறவழி சாலையில் கிழக்கு பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்குள்ள சாலையில் தடுப்புச்சுவர் ஏதும் இல்லை. இந்த சாலை வழியாக தினமும் 24 மணி நேரமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.