கரூரில் இருந்து வெள்ளியணை வழியாக ஏமூருக்கு செல்லும் சாலை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக இருந்ததால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தார்சாலையாக மாற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு மண்ணை சமன்படுத்தி, அதன்மேல் ஜல்லி கற்கள் கொட்டி பரப்பட்டது. அதன் பின்பு சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் பயணிக்க முடியாமல் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அந்த பணியை முடிக்க வேண்டும் என ஏமூர், ஏமூர் நடுப்பாளையம், சீத்தப்பட்டி, கற்பகா நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.