விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாவடி தோப்பு பகுதிகளில் சாலை அமைப்பதற்காக அனைத்து தெருக்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பணி முடிவடையாமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கிழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இப்பகுதியில் சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.