தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-09-28 14:01 GMT

கோவை வேடப்பட்டி அருகே ஆண்டிபாளையம் பகுதியில் இருந்து பேரூர் மற்றும் தெலுங்குபாளையம் பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை மண் சாலையாக உள்ளது. இதன் காரணமாக மழை பெய்தால், சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் அதிகரிக்கிறது. எனவே அந்த சாலையை தார்சாலையாக மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்