சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பஸ் நிலையம் அருகில் சிலர் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் நடைபாதையினர், வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதியில் கடை, அலுவலகம் நடத்தி வருபவர்களும் சாலையில் ஏற்பட்டுள்ள வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே வாகனங்களை சாலையில் நிறுத்துவதற்கு அதிகாரிகள் தடைவிதிக்க வேண்டும்.