வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படுமா?

Update: 2022-09-27 15:17 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி அருகே சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளதால் தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வரும்போது, அவர்கள் நிலை தடுமாறி செல்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்கள் வேகத்தடையில் வாகனத்தைவிட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்