கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் புங்கம்பாடி ரோடு எஸ்.பி. நகர் அருகில் தார் சாலையோரத்தில் உள்ள மண் சரிந்து ரோடு முழுவதும் பரவி கிடக்கின்றது. இதனால் அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் செல்வோர் சில நேரங்களில் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.