மோசமான சாலை
திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் சோதனைச்சாவடி அருகே சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. அதில் கழிவுநீர்தேங்கி நிற்கிறது. வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது தெளிக்கிறது. இதனால் அவர்களின் ஆடைகளில் சேறும், சகதியும் தெறிக்கிறது. கடும் துர்நாற்றமும் வீசுகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்து கழிவுநீர் தேங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சிவா,திருப்பூர்.
9841285733