சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்- காரைக்குடி செல்லும் சாலையில் தம்பிபட்டி பகுதியில் ஏராளமான வாகனங்கள் அதிக வேகத்தில் பயணிக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.