குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-24 14:58 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து கூத்தாடிவயல், மூக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் சாலை கடந்த 20 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் நடந்து செல்வே சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்