சாலையோரத்தில் ஆபத்தான பள்ளம்

Update: 2022-09-24 12:44 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதி கொருக்கை அரசு கல்லூரி செல்லும் சாலையோரத்தில் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இந்த நிலையில் சாலையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது சாலையையும் கால்வாய் பள்ளத்தையும் இணைக்கும் வகையில் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளத்தை மூடவும், கால்வாய் ஓரத்தில் தடுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்