சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி

Update: 2022-07-14 10:09 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஜீவப்பசமுத்திரம் கிராமத்தின் சாலை கோவிந்தகுடி மெயின் சாலையுடன் இணைந்துள்ளது. தற்போது இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்கள் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. இதன்காரணமாக பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்