சிதிலமடைந்த தார்சாலை

Update: 2022-09-20 15:08 GMT

கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மூர்த்திபாளையம் செல்லும் தார் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தார் சாலை நெடுகிலும் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த தார் சாலை வழியாக ஏராளமான கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுகிலும் சிதிலமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்