திட்டக்குடி நகராட்சியில் தேரடி வீதியில் சிலர் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க தேரடி வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.