சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சிறுபாலை கிராம சாலை மண்ரோடாக காட்சியளிக்கிறது. மழை பெய்தால் சாலையானது சேறும், சகதியுமாக மாறுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் மண்ரோட்டை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும்.