கனரக வாகனங்களால் சேதம் அடையும் சாலைகள்

Update: 2022-09-18 13:06 GMT

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு சிமெண்டு தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் நிலக்கரியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலக்கரி நெய்வேலி டவுனிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் தினசரி ஜெயங்கொண்டம், வி.கைகாட்டி வழியாக அதிக பாரத்துடன் ஏற்றி வரப்படுகிறது. நிலக்கரி ஏற்றி வரும் லாரிகள் வேகத்தடைகள் மீது வேகமாக செல்வதால் சாலைகளில் நிலக்கரி சிதறி விடுகிறது. நிலக்கரி துகள் வழுக்கும் தன்மையுடையதால் சில சமயங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்தும் நிகழ்ந்துள்ளது. மேலும் சுண்ணாம்புக்கல் லாரிகள் அதிக பாரத்துடன் செல்வதால் சாலைகளில் சுண்ணாம்புகள் சிதறி விடுகிறது. மேலும் நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகளால் வி.கைகாட்டி முதல் அரியலூர் கலெக்டர் அலுவலகம் வரை ஆங்காங்கே சாலைகள் அதிகளவில் சிதிலமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்