லாரிகளால் அதிகரிக்கும் விபத்து

Update: 2022-09-17 14:08 GMT

மயிலம் அருகே வழுதாவூரிலிருந்து கொண்டலாம்குப்பம் வழியாக கல்குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றி செல்லப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க போக்குவரத்து அதிகம் உள்ள நேரமான காலை 7 மணி முதல் 9 மணி வரை டிப்பர் லாரிகளை இயக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இருப்பினும் அந்த உத்தரவை மீறி டிப்பர் லாரிகளில் மண் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்