ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி முதல் தேவிபட்டினம் செல்லும் பாதையில் ரோட்டில் முட்புதர்கள் வளர்ந்து உள்ளது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சாலையோரத்தில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.