வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-07-13 14:24 GMT

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு சந்தை தரங்கம்பாடி பழைய ரெயிலடி சாலையில் உள்ளது தரங்கம்பாடி தாலுகா அலுவலகம் உள்ளது. இங்கு பொறையாறு, தரங்கம்பாடி, திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், வடகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தினமும் போக்குவரத்து அதிகம் காணப்படும் இந்த சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் வேகமாக சென்று வருவதால் பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். மேலும், வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்