நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு துறையூர் சாலையில் இருந்து கொசவம்பட்டி ஏரி கரை வழியாக இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.