புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கல்லுக்காரன்பட்டியில் இருந்து கந்தர்வக்கோட்டை ஒன்றியம் பெரிச்சுவண்ணியம்பட்டி வரை செல்லும் 3 கிலோ மீட்டர் தார்சாலை போடப்பட்டு 3 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில், பல்வேறு இடங்களில் தார்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவேச கப்பிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் தார்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.