சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-15 13:50 GMT
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் கடற்கரையில் இருந்து குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வரை தார் சாலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பகுதியில் முன்பு தண்ணீர் தேங்கியதால், சாலையை உடைத்து தண்ணீரை கடலுக்குள் திருப்பி விட்டனர். இதனால் சாலை துண்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது தசரா திருவிழாவுக்கு பக்தர்கள் வருவார்கள் என்பதால், அந்த சாலையை சீரமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

சாலை வசதி