கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கரூர்-சேலம் சர்வீஸ் சாலையில் வாத்துக்கறியுடன் டிபன் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைக்கு சாப்பிட வருபவர்கள் அவர்களது கார்களையும், லாரிகளையும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சர்வீஸ் சாலையோரம் நிறுத்திவிட்டு சாப்பிட செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.