சேறும், சகதியுமான மண்சாலை

Update: 2022-09-14 14:10 GMT
கரூர் மாவட்டம், புங்கோடையில் இருந்து குளத்துப்பாளையம் செல்லும் மண்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக இருக்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லவே முடியாததால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்