குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-14 13:31 GMT

கரூர் மாவட்டம், மகாதானபுரம் பிரிவு சாலையில் இருந்து பழைய ஜெயங்கொண்டம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்